உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

சி.கே., பள்ளியில் இன்று கண்காட்சி

கடலூர் :

                 கடலூர் சி.கே., மெட்ரிக் பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்கள் பங்கேற்கும் கண்காட்சி இன்று நடக்கிறது.

இதுகுறித்து பள்ளி இயக்குனர் சந்திரசேகரன் கூறியதாவது:

           சி.கே., மெட்ரிக் பள் ளியில் இன்று மாணவ, மாணவிகளுக்கான கண்காட்சி நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவுத்திறன் வெளிப்படும் வகையில் புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. வாழ்வியல் கல்வி குறித்து பாட்டு, நடனம் மற்றும் ஓவியம் குறித்த கலைகளில் திறமையை வெளிப்படுத்துதல். தொழில் முனைவோர் பிரிவில் மாணவர்கள் கண்டுபிடிப்பான "கூல் கேப்' எனப்படும் தொப்பியில் சிறிய அளவிலான மின் விசிறி வைத்து பேட்டரியில் இயக்கச் செய்தல். முட்டையில் யோகாசனம் செய்தல், யோகா பயிற்சியாளரின் ஆணி படுக்கையில் 50 வகையான யோகாசம் செய் தல் உள்ளிட்ட பல்வேறு வகையான திறமைகளை வெளிப்படும் விதமாக இருக்கும். மேலும் கண்காட்சியில் பெற் றோர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் கண்டுபிடிப்புகளும் வைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior