உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

வேட்டி, சேலை பதுக்கல் ஆர்.டி.ஓ., விசாரணை

நெல்லிக்குப்பம் :

               நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் குறித்து ஆர்.டி.ஓ., நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

                 பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை, எளியோருக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள்கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த பிளாஸ்டிக் பொருள் வியாபாரி கண்ணன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் வைத் திருந்த இலவச வேட்டி, சேலைகளின் வரிசை எண்களை நேற்று மாலை ஆர்.டி.ஒ., செல்வராஜ் சோதனை செய்தனர். மேலும் இவை அனைத் தும் வி.ஏ.ஓ.,விடமிருந்து பெறப்பட்டதா? அல்லது பொதுமக்களிடம் பணத்திற்கு வாங்கப் பட்டதா என்பது குறித்தும் விசாரணை மேற் கொண்டார்.பறிமுதல் செய்யப்பட்ட வேட்டி, சேலைகளில் பெரும்பாலானவை கடலூர் தாலுகாவைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior