உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

காஸ் சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூல் முறைப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?

கடலூர் :

                   வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதால் பொது மக்கள் கவலையடைந்துள்ளனர். நகரப்பகுதியில் வசிப்பவர்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் அத்தியாவசியமானதாகும். அரசே இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கி வருவதால் கிராமப்பகுதியில் காஸ் இணைப்பு அதிகரித்து வருகிறது.கடந்த காலங்களில் விறகு மூலம் சமையல் செய்து வந்த கிராம மக்கள் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி சமைக்க துவங்கியுள்ளனர். இதனால் பொதுவாக சமையல் காசிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

                        இந்த தட்டுப்பாடை சமாளிக்க காஸ் ஒரு சிலிண்டர் வினியோகம் செய்த தேதியிலிருந்து 21 நாள் கழித்துதான் ஏஜென்சியில் மீண்டும் காஸ் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால் ஏஜென்சியில் பதிவு செய்தவுடன் சிலிண்டர் வழங்குவதில்லை.

                    இதனால் மக்கள் சிலிண்டர் வருகையை எதிர்நோக்கி காத்துக்கிடக்கும் நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை லாவகமாக பயன்படுத்தி சிலிண்டர் வினியோகிப்பவர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர். அரசு நிர்ணய விலையான 321.40 ரூபாய்க்கு பதிலாக 337 ரூபாயும், கிராம பகுதிகளில் 347 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே வீடுகளுக்கு வினியோகிப்படும் காஸ் சிலிண்டருக்கு 5 ரூபாய் "டிப்ஸ்' கேட்பது வழக்கம். இதுவே தற்போது நிர்ணய தொகையை போன்று ஒவ்வொரு சிலிண்டருக்கும் கூடுதல் தொகையாக 15, 25 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையில் ஏஜென்சிகளுக்கு தொடர்பு உள்ளதா, அல்லது வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கா என்பது புரியவில்லை. இதனை வரைமுறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior