உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

சூரிய கிரகணத்தால் பூஜையில் மாற்றம்

சிதம்பரம் :

                  மாட்டு பொங்கல் அன்று சூரிய கிரகணத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் கால பூஜைகள் முன்கூட்டியே முடிக் கப்படுகிறது. மாட்டு பொங்கல் தினமான 15ம் தேதி சூரிய கிரகணம் வருகிறது. காலை 11.25 மணி முதல் 3.15 மணி வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. தமிழகத்தில் தஞ்சை, நாகை, கும்பகோணம், ரமேஸ்வரம், சிதம்பரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் தெளிவாக தெரியும்.

                  சூரிய கிரகணத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இயல்பான பூஜைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. வழக்கமாக காலை நடை திறக்கப் பட்டு காலை நிவேத்தியம், 8.30மணிக்கு காலசந்தி, 11 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 12 மணிக்கு உச்சிக் காலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8 மணிக்கு இரண்டாம் காலமும், 10 மணிக்கு அர்த்தசாம பூஜை நடக்கிறது. சூரிய கிரகணத்தையொட்டி அன்று காலை 8 மணிக்குள் காலசந்தி, இரண் டாம் காலம், உச்சிக்காலம் ஆகிய பூஜைகள் முடிக்கப் படுகிறது. ஆனால் வழக்கமாக கோவில் நடை திறந்திருக்கும். மாலை வழக்கமான பூஜைகளில் மாற்றம் ஏதும் இருக்காது என தீட்சிதர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior