உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

மணல் ஏற்றி வரும் லாரிகளில் மீண்டும் அடாவடி பணம் வசூல்

பண்ருட்டி :

                       பண்ருட்டி அருகே மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் மீண்டும் அடாவடி நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம் பெண்ணையாறு மணல் குவாரியில் மணல் ஏற்றிச் செல்லும் லாரிகளில் கொரத்தி, வேலங்காடு, திருத்துறையூர், கயப்பாக்கம், கள்ளிப் பட்டு, கட்டமுத்துப்பாளையம், ஒறையூர், கண்டரக்கோட்டை, பூண்டி, கயப்பாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களில் லாரிகளை வழிமறித்து கோவில் திருப்பணி நன்கொடை என்ற பெயரில் தலா 20 ரூபாய் அடவாடியாக வசூலித்தனர்.  

இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானது.

                          அதனைத் தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் கடந்த 18ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஒ., செல் வராஜ் தலைமையில் கூட் டம் நடந்தது. அதில் அண் ணாகிராமம் ஒன்றியத்தை சேர்ந்த 8 ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் லாரிகளில் எவரும் பணம் வசூலிக்கக் கூடாது.

               அவ்வாறு வசூலிப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என ஆர்.டி.ஓ., எச்சரித்தார். அதன்பிறகு ஒரு வாரம் லாரிகளில் எவரும் வசூலிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மணல் லாரிகளில் மீண்டும் 12 கிராமங்களில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆர்.டி.ஓ., உத்தரவை மீறி நடைபெற்று வரும் இந்த அடாவடி வசூலை தடுத்து நிறுத்திட மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior