உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 12, 2010

மங்களூரில் தீயணைப்பு நிலையம் தே.மு.தி.க., இளைஞரணி கோரிக்கை

சிறுபாக்கம் :

                   மங்களூரில் தீயணைப்பு நிலையம் துவங்க வேண்டும் என தே.மு. தி.க., வலியுறுத்தியுள்ளது.

                 மங்களூர் ஒன்றிய தே.மு.தி.க., இளைஞரணி செயல்வீரர் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கிளை நிர்வாகிகள் திருமுருகன், அய்யப்பன் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஆனந்தன் வரவேற்றார். கூட்டத்தில் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் கிராம தெருக்களில் பிளீச்சிங் பவுடர், கொசு மருந்து தெளிக்க வேண்டும்.ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். பஸ் நிறுத்தம் அருகிலுள்ள டாஸ்மாக் கடையினை பயணிகளின் நலன் கருதி இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. கிளை பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior