உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

திருமணத்துக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் நகை திருட்டு

கடலூர்:

             திட்டக்குடி அருகே திருமண விழாவுக்கு வந்த பெண்ணிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டன. திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் அருகே பொயனப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சிதாவுக்கும், ராமநத்தம் வடிவேலுவுக்கும் வெள்ளிக்கிழமை ராமநத்தத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு ரஞ்சிதாவின் தோழி, அரியலூர் மாவட்டம் துங்கபுரத்தைச் சேர்ந்த ஆசிரியை கவிதா தனது தாயாருடன் வந்து இருந்தார். திருமணத்துக்கு வந்தபோது அணிந்து இருந்த தனது 8.5 பவுன் நகைகளை கவிதா ஒரு பையில் வைத்து, தாயார் தனலட்சுமியிடம் கொடுத்து இருந்தார். குழந்தையை கவனித்துக் கொண்டு இருந்த தனலட்சுமியிடம் இருந்த நகை, எப்படியோ திருடு போய்விட்டது. அதன் மதிப்பு ரூ.1 லட்சம். ராநமநத்தம் போலீஸôர் வழக் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior