உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:
 
               மங்கலம்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
 
                 ஓய்வு பெற்ற அலுவலர்களை பணியில் அமர்த்துவதற்கான அரசாணையைக் கண்டித்து பிப்ரவரி 3-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாகை மற்றும் கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்தும் மங்கலம்பேட்டை கடைவீதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் அசோகன், வழக்கறிஞர் சங்க மாநில க் குழு சந்திரசேகரன், விஜி, சிவஞானம், ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior