உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவு: எஸ்.பி.,

பண்ருட்டி : 

                  பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்தப்படும் என எஸ்.பி,. கூறினார். பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் எஸ்.பி.,அஷ்வின் கோட்னீஸ் நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் கூறியதாவது:

                    பண்ருட்டி நகரில் போக்குவரத்து சீரமைக்க ஆய்வு செய்வதற்காக ஆலோசனை நடத்தினேன். நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சியினர் அகற்ற கூறியுள்ளேன். தற்போது போலீசார் பற்றாக்குறை காரணமாக 16 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது. பண்ருட்டி போலீஸ் ஸ்டேஷனில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் போலீஸ் எண்ணிக்கை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். பின் நான்குமுனை சந்திப்பு, பஸ் நிலையம் ஆகிய பகுதியில் பார்வையிட்டு மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior