உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம்

நெய்வேலி:

            நெய்வேலியை அடுத்த கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 9 சென்ட் நிலத்தை கொக்கன்குப்பத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன் குடும்பத்தினர் தானமாக வியாழக்கிழமை வழங்கியுள்ளனர். அம்மேரி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கன்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராம கல்விக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் கோ.தங்கராசு தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் இருதயமேரி வரவேற்றார். அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மற்றும் முருகேசன்  குடும்பத்தினர் தங்கள் குடும்ப சொத்து 9 சென்ட் நிலத்தை வட்டார மேற்பார்வையாளர் ஜம்புலிங்கம் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் நடராஜன் முன்னிலையில் பள்ளிக்குத் தானமாக வழங்கினர். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கு.பாண்டியன், கல்வியாளர் சாமிக்கண்ணு, ஆசிரியர்கள் இம்மானுவேல்மேரி, கயல்விழி, பிருந்தா உள்ளிட்டோர் விழாவில்  கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் செல்வராணி நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior