உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

தி.மு.க., ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்: அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்

காட்டுமன்னார்கோவில் :

               தமிழக முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 36,667பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். குமராட்சி அடுத்த திருநாரையூர் கிராமத்தில் அரசு இலவச "டிவி' வழங் கும் விழா நடந்தது. டி.ஆர்.ஒ., நடராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சோழன் வரவேற்றார். குமராட்சி சேர்மன் மாமல் லன், ஆர்.டி.ஓ., ரங்கராஜ் முன்னிலை வகித்தனர். விழாவில் 854 பயனாளிகளுக்கு இலவச "டிவி' வழங்கிய அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:கடந்த ஐந்து ஆண்டுகளில் திருநாரையூர் ஊராட் சியில் 58 லட்சத்து 90 ஆயிரம் செலவில் சாலை உள் ளிட்ட பல்வேறு நலத் திட்ட பணிகள் நடந்துள் ளது. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களுக்கு நேரிடையாக சென்று திட்டங்களை கொடுப்பது தி.மு.க., அரசு மட்டுமே.

             மாநிலம் முழுவதும் 18 லட்சத்து 86 ஆயிரம் கர்ப் பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப் பட்டுள்ளது. வெள்ளத்தால் குடிசை பகுதிகள் பாதிப்பதை தவிர்த்திட குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றும் திட்டத்தை திருச்சியில் மார்ச் 3ல் கருணாநிதி தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக 3.5 லட்சம் வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது. குடிசைகள் அதிகம் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் இதனால் அதிகம் பயன் பெறும். கருணாநிதியின் இந்த மக்கள் திட் டங்கள் ஜெ., ஆட்சிக்கு வந்தால் இருக்காது. எனவே தி.மு.க., ஆட் சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இதுவரை 121கோடியே 17 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. 36,667 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என பேசினார்.விழாவில் தாசில்தார் வீரபாண்டியன், பி.டி.ஓ., க்கள் ஆண்டவர், பாலசுப்ரமணியன், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், தனலட்சுமி பங்கேற்றனர். ரகுராமன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior