உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 13, 2010

கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் உதயம்

கடலூர் : 

           கடலூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கம் மாநில தலைவர் அந்தோணி தலைமையில் இயங்கி வருகிறது. கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் சங்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலும் சங்கம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 14ம் தேதி கடலூர் டவுன்ஹாலில் ஓய்வு பெற்ற காவலர் அலுவலர்கள் நல சங்க அறிமுக கூட்டம் மாவட்டத் தலைவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior