உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

பெண்ணை கற்பழிக்க முயற்சி: 2 பேருக்கு வலை

கடலூர் : 

                   நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிய பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் துறைமுகத்தை அடுத்த ராசாப் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி குப்பு(27). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். வேலு இறந்துவிட்டதால் குப்பு குழந்தைகளுடன் தனியாக பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த ரவி, சுகுராஜ் இருவரும் குப்புவின் வீட் டிற்குள் நுழைந்து வாயை பொத்தி கற்பழிக்க முயன் றனர். குப்புவின் கூச்சலைக் கேட்டு கிராமத்தில் உள்ளவர்கள் ஓடிவர ரவி, சுகுராஜ் தப்பியோடி விட்டனர். உடன் கிராமத்தைச் சேர்ந்தவர் கள் குப்புவை கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குப்பு கொடுத்த புகாரின் பேரில் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து ரவி, சுகுராஜ் தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior