உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

லாரி மோதி விவசாயி பலி

கடலூர் : 

             குள்ளஞ்சாவடி அருகே டேங்கர் லாரி மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற விவசாயி அதே இடத்தில் இறந்தார். குள்ளஞ்சாவடியை அடுத்த வன்னியர் பாளையத்தைச் சேர்ந்தவர் சக்கரை என்கின்ற விஜயக்குமார்(45) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு குள்ளஞ்சாவடியிலிருந்து வன்னியர்பாளையம் நோக்கி மோட்டார் பைக்கிள் வந்துகொண்டிருந்தார். அப்போது கடலூரிலிருந்து ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி குள்ளஞ்சாவடி அருகே எதிரே வந்த மோட்டார் பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் விஜயக்குமார் தூக்கியெறியப்பட்டார். இதில் படுகாயடைந்த அவர் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் பலியானார். இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி சப் இன்ஸ்பெக்டர் நடராஜன், ஏட்டு மாசிலாமணி மற் றும் போலீசார் வழக்குப் பதிந்து டேங்கர் லாரி டிரைவர் மேட்டூரைச் சேர்ந்த குருநாதனை(52) கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior