உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

அண்ணாமலை பல்கலையில் நுழைவு தேர்வு: விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது

சிதம்பரம் : 

             சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மருத்துவம், இன்ஜினியரிங் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது. சிதம்பரம் அண்ணாமலை பல்லைக்கழகத்தில் 2010-11ம் ஆண்டிற்கான பி.இ., பி.எஸ்.சி., (விவசாயம்), பி.எஸ்.சி., (தோட் டக்கலை), எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்,. பி.பி.டி., பி.எஸ்.சி., (நர்சிங்), பி.பார்மசி., போன்ற பட்ட படிப்பு நுழைவுத் தேர்வுக் கான விண்ணப்பங்கள் விற்பனையை துணை வேந்தர் ராமநாதன் துவக்கி வைத்தார்.

                    பி.இ., பி.எஸ்.சி.,( விவசாயம்), பி.எஸ்.சி., (தோட்டக்கலை) போன்ற பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் 400 ரூபாய்க்கும், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.பி.டி., பி.எஸ்.சி.,(நர்சிங் மற்றும் பி.பார்ம்) ஆகியவைகளுக் கான விண்ணப்பம் 300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 31ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும், விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ, நேரிடையாகவோ பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வகுப்புகளில் இக்கல்வியாண்டில் சேர்ந்து படிக்க நுழைவுத்தேர்வு அவசியம் என்றும், தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த நுழைவு தேர்வை கட்டாயம் எழுதவேண்டும் என்றும் துணைவேந்தர் ராமநாதன் கூறினார். இந்நிகழ்ச்சியில் பதிவாளர் ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டபலர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior