உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

ரேஷன் கடையில் திருட முயற்சி

சிதம்பரம் : 

                  சிதம்பரத்தில் ரேஷன் கடையில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற துணிகர சம்பவம் நடந்தது. சிதம்பரம் மன்னார்குடி தெருவில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன் கடையின் விற்பனையாளர் ஜெயச்சந்திர ராஜா நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து கடையை திறந்தார். அப் போது கடையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி கொள்ளையடிக்க முயன்றிருப்பது தெரியவந்தது. கடையின் உள்ளே பீரோவில் இருந்த பதிவேடுகள் கீழே சிதறி கிடந்தது. பாமாயில் பாக்கெட்டுகள் பிரித்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் கூட்டுறவு விற்பனை சங்க தனி அதிகாரி வாசுதேவன் சிதம்பரம் நகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior