உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

கணக்காளர்களுக்குள் பிரச்னை: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கடலூர் : 

           கிளை கருவூலகம் மற்றும் ஸ்டேட் பாங்க் கணக்காளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.  பண்ருட்டி கிளை கருவூல கணக்காளர் பாபு. இவர் நேற்று முன்தினம் பென்ஷன் சம்பந்தமான "பிளாப்பி'யை ஸ்டேட் பாங்க் கணக்காளர் ஜெயபாலிடம் கொடுத்தார். "பிளாப்பி' இயங்கவில்லை என ஜெயபால் கூறியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பாபு பண்ருட்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தாசில்தார் பாபு தலைமையில் நேற்று மாலை இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஸ்டேட் பாங்க் கிளை மேலாளர் ஆறுமுகம், கருவூலக கணக்குத் துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில் நடந்த நிகழ்ச் சிக்கு ஸ்டேட் பாங்க் கணக்காளர் ஜெயபால் வருத்தம் தெரிவித்ததால் சுமூக தீர்வு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior