உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

டாஸ்மாக் பிராந்தி கடத்திய இருவர் கைது

புவனகிரி : 

                கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக டாஸ்மாக் பிராந்தி பாட்டில்கள் கடத்திய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். புவனகிரி அடுத்த கீழ்நத்தம் ஆடூரை சேர்ந்தவர்கள் குமார் (26), முத்து (25). இருவரும் புவனகிரி டாஸ்மாக் கடையில் 40 குவார்ட்டர் பிராந்தி பாட்டில்களை வாங்கிக் கொண்டு கூடுதல் விலைக்கு விற்க மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு சென்றனர். அப்போது புவனகிரி பாலம் அருகில் வாகன தணிக்கை செய்து செண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்த 40 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior