உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 27, 2010

மக்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் டி.ஐ.ஜி., மாசானமுத்து 'அட்வைஸ்'

கடலூர் : 

                 போலீசார் தங்கள் குடும்பத்தை நேசித்தால் தான் சிறப்பாக பணியாற்ற முடியும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். ஆயுதப்படை போலீசாருக்கு நினைவூட்டும் கவாத்து பயிற்சி கடலூர் எஸ்.பி., அலுவலக மைதானத்தில் கடந்த 10ம் தேதி துவங்கியது. பயிற்சியில் கலந்து கொண்ட 450 போலீசாருக்கு ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் மணவாளன் பயிற்சி அளித்தார். நிறைவு நாளான நேற்று கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் கண்ணீர் புகை குண்டு வீசியும், பின்னர் லத்தி சார்ஜ், துப்பாக்கி சூடு மூலமும் கூட்டத்தை கலைப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.இதன் நிறைவு விழா நேற்று மாலை போலீஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.

                   எஸ்.பி., அஷ் வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் மணவாளன் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி., சக்திவேல், ஊர்க்காவல் படை ஏ.சி.ஜி., டாக்டர் ராஜேந்திரன், ஏரியா கமாண்டர் கேதார்நாதன், துணை கமாண்டர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி 

டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசுகையில் 

                       " போலீஸ் துறையில் படித்த இளைஞர்கள், துடிப்பானவர்கள் என அதிகம் உள்ளனர். மேலும் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். பொதுமக்கள் குறைகளை பரிவுடன் கேளுங்கள். அப்படி கேட்டாலே அவர்களின் குறைகளை பாதி குறைத்து விடலாம். பொதுமக்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் உடல் நலத் திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண் டும். முக்கியமாக உங்கள் குடும் பத்தை நேசித்தால்தான் சிறப்பாக பணியாற்ற முடியும்' என பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior