உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

ரேஷன் கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம்

கடலூர் : 

           எடைக் குறைவாக பொருட்களை வழங்கிய ரேஷன்கடை பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

               குறிஞ்சிப்பாடி அடுத்த அம்பலவாணன்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் டி.ஆர்.ஓ., நடராஜன் திடீர் ஆய்வு மேற் கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கிய துவரம் பருப்பு, உளுந்து உள்ளிட்ட பொருட்களின் எடை குறைவாக இருந் தது. பில் போடப்பட்டும் சர்க்கரை வழங்கவில்லை. கடையில் பாமாயில, துவரம் பருப்பு, உளுந்து இருப்பு குறைவாக இருந்ததை தொடர்ந்து விற்பனையாளர் சுராஜ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior