உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

என்.எல்.சி., பணியாளர்கள் சலுகைகளை விரைந்து முடிக்க எம்.பி., அழகிரி வலியுறுத்தல்

நெய்வேலி : 

              என்.எல்.சி., நிரந்தர, ஒப்பந்த பணியாளர்களுக்கான சலுகைகளை விரைந்து நிறைவேற்றி தருமாறு சேர்மன் அன்சாரியிடம் எம்.பி., அழகிரி வலியுறுத்தினார். என்.எல்.சி.,யில் நேற்று முன்தினம் சேர்மன் அன்சாரியை கடலூர் எம்.பி., அழகிரி சந்தித்து என்.எல்.சி.,யில் பணியாற்றும் நிரந்தர, ஒப்பந்த பணியாளர்களின் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். 

இதுபற்றி எம்.பி., அழகிரி கூறும் போது : 

                    என்.எல்.சி., பணியாளர்களுக்கான அனைத்து சலுகைகளையும் விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என சேர்மன் அன்சாரியிடம் தெரிவித்தபோது, நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் ஒவ் வொன்றாக விரைவில் செய்து முடிப்பேன் என தெரிவித்தார்.மேலும் என்.எல்.சி., நிறுவன வளர்ச்சி எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு நிரந்தர தொழிலாளர் கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக் கான தேவைகளை பெற்று தருவது எனது கடமை. எனவே தொடர்ந்து என். எல்.சி., நிர்வாகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் எனது கடமைகளை செய்து முடிப்பேன் என எம்.பி., அழகிரி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior