உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

மோட்டார் பைக் விபத்து ஒருவர் பரிதாப பலி

பண்ருட்டி : 

                     புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் கோவிந்தன்(45). வில்லியனூர் செல்லியம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ரவி(52) இருவரும் நேற்று முன்தினம் சென்னை-கும்பகோணம் சாலையில்  மோட்டார் பைக்கில் சென்றனர். அப்போது பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி யில் நிலைதடுமாறி மோட்டார் பைக் அருகில் உள்ள பள்ளத்தில்  விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும்  ரவி பலத்த காயத்துடன்   பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior