உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

ள்ளி கணினி அறைக்கு பூட்டு

விருத்தாசலம் : 

                         பூதாமூர் நகராட்சி பள்ளி கணினி அறை பூட் டியே கிடப்பதையொட்டி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விருத்தாசலம் பூதாமூரில் நகராட்சி நடுநிலை பள்ளியில் கடந்த மாதம் 22 ம் தேதி மாணவர்களுக் கான கணினி அறை திறப்பு விழா நடந்தது.  மாணவர்களுக்கு அடிப் படை கணினி பயிற்சி அளிப்பதற்காக திறக்கப்பட்ட அறை கடந்த பத்து நாட்களாக பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி அ.தி.மு.க., கவுன்சிலர் ரங்கநாதன் மற் றும் பொதுமக்கள் பள் ளிக்கு சென்று மாணவர்கள் கல்வி கற்க திறக்கப்பட்ட கணினி அறை ஏன் பூட் டியே கிடக்கிறது என  தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். பின்பு அங்கு வந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அருளழகன், காமராஜ், சந்திரகுமார் உள்ளிட்டோர் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior