உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

புதுக்குளம் மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம்

திட்டக்குடி : 

                  திட்டக்குடி அடுத்த புதுக்குளம் மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. புதுக்குளம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, பூர்வாங்க பூஜைகள், வாஸ்து சாந்தி நடந்தது. இரவு 9 மணிக்கு மேல் முதல் கால யாகபூஜை, பூர்ணாஹூதியும் தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு மேல் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.வேத விற்பன்னர்கள் சிவாச்சாரியார்கள் என் கண் சிரோன்மணி ரத்தினசபாபதி, சோமசுந்தரம், திட்டக்குடி தண்டபானி குருக்கள் தலைமையில் யாகசாலை பூஜைகளும், 10 மணிக்கு மேல் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப் பட்ட புனிதநீர் கலசங் களை சுமந்து கோவில் வெளிப்பிரகாரத்தில் வலம் வந்து ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.புதுக்குளம், சிறுமுளை, பெருமுளை, நிதிநத்தம், திட்டக்குடி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior