உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 05, 2010

அதிவிரைவுப்படை போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி: எஸ்.பி., பரிசு வழங்கி பாராட்டு

கடலூர் : 

             கடலூர் கேப்பர் மலை துப்பாக்கி பயிற்சி மைதானத்தில் அதிவிரைவுப் படை போலீசார் சிறப்பு துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டிகளை எஸ்.பி., அஷ்வின் கோட் னீஸ் பார்வையிட்டார். கடலூர் மாவட்டத்தில் விரைவுப்படை, மற்றும் அதிவிரைவுப்படை போலீசார் என இரு பிரிவுகள் உள்ளன. விரைவுப்படை போலீசார் மாவட்டத்தில் கலவரம்,மோதல் போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த பிரத்தியேகப் பயிற்சி அளிக்கப்பட்டுள் ளது. மாவட்டத்தில் தற் போது அதிவிரைவுப்படை போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டு 30 போலீசார் தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும் கடலோர மாவட்டம் என்பதால் தீவிரவாதிகள் அச்சுறுத்தலை எந்த நேரத்திலும் எதிர் கொள்ளும் விதமாக அதிவிரைவுப்படை போலீசாருக்கு கடந்த இரண்டு நாட் களாக துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட் டது.2வது நாளான நேற்று பயிற்சி முடிக்கப்பட்டு, போட்டி நடத்தப்பட்டது. குறி பார்த்து சிறப்பாக துப்பாக்கி சுடும் பயிற்சியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior