உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

சிறுபாக்கம் பகுதியில் பருவமழை தாமதத்தால் பரிதவிக்கும் விவசாயிகள்


சிறுபாக்கம்:

              சிறுபாக்கம், வேப்பூர் மானாவாரி விவசாயிகள் நிலத்தினை உழுது, பருவமழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

             சிறுபாக்கம் மற்றும் வேப்பூர் பகுதிகளைச் சுற்றியுள்ள கழுதூர், அரியநாச்சி, சேப்பாக்கம், பெரியநெசலூர், மங்களூர், மலையனூர், அரசங்குடி, ஒரங்கூர் உள்ளிட்ட சுமார் 100 கிராமங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள் தொடக்க காலத்தில் ஆடிப்பட்டத்திற்கு ஏற்றவாறு, தங்களின் மானாவாரி நிலங்களில் வரகு, சோளம், மணிலா பயிர் கள் விளைவித்து வந்தனர்.

                   கடந்த சில ஆண்டுகளாகவே பருவநிலை மாற்றத்தால் காலம் தவறிய மழை, கடுமையான வெயில் ஆகியவற்றால் பயிர்களை மாற்றி, பருத்தி, மக்காச்சோளம் பயிர்களை விளைவித்து வருகின்றனர். "ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழிக்கேற்ப முன்னதாக பயிரிட்ட நிலத்திலுள்ள கழிவுகள், களைகளை அகற்றி 4 முறை டிராக்டர் கொண்டு உழவு செய்து நிலத்தினை தயார் செய்தனர். ஆனால் இந்த ஆண்டும் பருவமழை பெய்யாமல் கடந்த ஒரு மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதால் மானாவாரி விவசாயிகள் பரிதவிப்புடன் பருவமழையை எதிர்பார்த்து காத்துள் ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior