உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

சிறுபாக்கத்தில் வெங்காயம் பயிர் சாகுபடி: வேளாண்துறை ஊக்குவிக்குமா?

சிறுபாக்கம்:

                 சிறுபாக்கத்தில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்க வேண்டும்.
  
                    சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த நீர்ப்பாசன சிறு, குறு விவசாயிகள் பருவமழை குறைவு மற்றும் காலம் தாழ்த்திய மழை, நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்ததால் காய்கறிகள் மற்றும் பூக்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வந்தனர். இதில் தோட்டக்கலை பயிரான கத்தரி, தக்காளி, வெங்காயம் ஆகிய பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.இவர்களுக்கு அரசு வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு மூலம் உயிர் உரங்கள், ரசாயன உரங்கள், வேளாண் கருவிகள் ஆகியவற்றினை மானிய விலையில் வழங்கி ஊக்குவித்தால் பெரும் ஒத்துழைப்பாக அமையும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior