உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 05, 2010

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி முற்றுகை: பண்ருட்டியில் பரபரப்பு

பண்ருட்டி: 

               பண்ருட்டியில் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு பதியாததால் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் பிற்பகலில் அலுவலகம் பூட்டப் பட்டது.

               மத்திய அரசின் ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கார்பரேஷன் கீழ் இயங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மைக்ரோ அலுவலகம் பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் உள்ளது.இங்கு 20 ஏஜன்டுகள் தினமும் காப்பீடு செலுத்தி வருகின்றனர். மேலும் 200 பேர் வாகனம் உள்ளிட்ட காப்பீடு செய்வது வழக்கம். ஆனால் நேற்று காலை முதல் மின் நிறுத் தம் காரணமாக கம்ப்யூட் டர் வேலை செய்யவில்லை என கூறி காப்பீடு செய்ய வந்தவர்களை திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

                இதனால் காப்பீட்டு அலுவலகத்தில் 20க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு புரோபசல் விண் ணப்பம் உண்மை நகல் வழங்குவதில்லை, குறிப்பிட்ட சில ஏஜன்டுகள் அலுவலகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். ஜெனரேட்டர், இன் வெர்ட்டர் வசதிகள் ஏற்பாடு செய்யாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாக புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதøனைத் தொடர்ந்து பிற்பகல் அலுவலகம் பூட்டப்பட்டது. 

இதுகுறித்து கிளை அலுவலர் அசோகன் கூறுகையில்,"

                            மின் நிறுத்தம் காரணமாக காப்பீடு பதிய முடியவில்லை. இன் வெர்ட்டர் சரியாக வேலை செய்யவில்லை. அதனால் எங்களது நெய்வேலி மண் டல மேலாளர் உத்தரவின் பேரில் அலுவலகத்தை பூட்டினோம்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior