உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

பண்ருட்டி தபால் நிலையம் முன் வியாபார சங்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி:
              பண்ருட்டி தாலுகா அனைத்து வியாபார சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

                   சில்லறை வணிகத்தில் 51 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவை கைவிட வேண்டுவது, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தவுள்ள முடிவை மத்திய அரசு கைவிட வேண்டுவது, 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஜார் தபால் நிலையத்தை முன்னறிவிப்பின்றி மூடியதை கண்டிப்பதுடன், மீண்டும் செயல்பட உத்தரவு பிறப்பிக்க வேண்டுவது, பண்ருட்டி ரயில் நிலையம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் பண்ருட்டியில் நின்று செல்ல வேண்டுவது, தொலைபேசி நிலையத்தில் இயங்கி வரும் தந்தி அலுவலகத்தை மூடுவது என்ற முடிவை கைவிட்டு செயல்பட உத்தரவிட வேண்டுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

                     காந்தி சாலையில் உள்ள ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட வணிகர்கள் முக்கிய வீதி வழியாகச் சென்று கும்பகோணம் சாலையில் உள்ள தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து வணிக நிறுவனங்களுக்கு காலை 11 மணிவரை விடுமுறை அளிக்கப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு சம்மேளத் தலைவர் கே.என்.சி.பாண்டுரங்கசெட்டியார் தலைமை தாங்கினார். செயல் செயலர் சி.ராஜேந்திரன், மளிகை வியாபாரிகள் சங்க செயலர் ஏ.ஜெயமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior