உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

"பன்றிக் காய்ச்சல் அச்சம் தேவையில்லை" : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

விருத்தாசலம்:
 
            பன்றி காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பன்றி காய்ச்சல் குறித்த அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
 
விருத்தாசலம் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:
 
              விருத்தாசலம் தொகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக |11 கோடி ரூபாய் மதிப்பில் பள்ளி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அமைச்சர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மட்டும்தான் செய்கிறார் என்பது தவறு. அரசின் திட்டங்கள் அனைத்து தொகுதி மக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த மாவட்ட முழுவதும் எனது தொகுதியைப் போல் நினைத்து செயல்படுகிறேன். 
 
               இந்த மருத்துவமனையில் |1.20 கோடி செலவில் மேலும் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்படும். இதேபோல் 29 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் |95 கோடி மதிப்பில் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளன. தேர்தல் அறிக்கைகளில் சொன்னதை எல்லாம் திமுக அரசு கொடுத்திருக்கிறது. 
 
                சில ஆண்டுகளுக்கு முன் கேஸ் இணைப்பு பெறுவது சிரமம். ஆனால் திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எளிமையாக இலவச கேஸ் அடுப்பு கிடைக்கிறது. மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் உள்ளன. கடந்த ஆண்டைவிட தற்போது பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைவாகத்தான் உள்ளது. தமிழகத்தில் 28 பேருக்குத்தான் பன்றி காய்ச்சல் தாக்கம் இருக்கிறது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக் காய்ச்சல் நோயை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் மருத்துவர்கள் குழு முடுக்கிவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பன்றி காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior