உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம்

நெய்வேலி:

              என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.

              என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக என்எல்சி இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த 1996-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து நீதிபதி மிஸ்ரா ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இத்தீர்ப்பை எதிர்த்து என்எல்சி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

               இதையடுத்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது. இது தொடர்பாக இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பரமசிவம் தலைமையில் கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி உதவியுடன் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரையும் சந்தித்து, வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தினர்.இதனிடையே எம்.பி. கே.எஸ்.அழகிரி வழக்கை தொடர்ந்து சந்திக்குமாறும், அதற்கு தான் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதியளித்ததையடுத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கை எதிர்கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலு வாதாடினார். இவ்வழக்கு விசாரணை திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் முடிவில் நீதிபதி வி.ஜெயின் மற்றும் தத் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு விவரம் குறித்து வழக்கறிஞர் சிங்காரவேல் கூறியது:

                   இவ்வழக்கு கடந்த 1996-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. என்எல்சியில் 1972 முதல் பணியாற்றிய ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு பதிலாக, 1990-ம் ஆண்டு என்எல்சி துவக்கிய இன்கோ-சர்வ் சொசைட்டியில் உறுப்பினர்களாக இருந்தவர்களையே நிர்வாகம் படிப்படியாக நிரந்தரம் செய்தது. இதை எதிர்த்துதான் இன்கோ-சர்வ் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் வழக்குத் தொடுத்தனர்.
  
இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ஜெயின் மற்றும் தத் ஆகியோர் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பில், 

                "ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்புப் பட்டியலை 3 மாதத்துக்குள்ளாக வெளியிட வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் தொடங்கப்பட வேண்டும். 3 மாதத்திற்கு பின் தீர்ப்பின் மீது நிர்வாகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டிருப்பதாக வழக்கறிஞர் சிங்கராவேல் கூறினார். ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிமூப்பு அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior