உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 18, 2010

கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள் கிராம மக்கள் திடீர் முற்றுகை

கடலூர்:

             ஊராட்சி தலைவரை வழக்கில் சேர்க்கக் கூடாது என கலெக்டர்  மற்றும் எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் மனு கொடுத்தனர். 

               கடலூர் அடுத்த திருமானிக்குழி ஊராட்சிக்குட்பட்ட  டி.புதுப்பாளையம் மற்றும் மாவடிப்பாளையம் கிராமத்தினரிடையே கடந்த 14ம் தேதி ஏற்பட்ட மோதலில் ஒரு கும்பல் மாவடிப்பாளையம் கிராமத்தில் புகுந்து வக்கீல் பகீரதன் வீட்டைத் தாக்கி, அங்கிருந்த மோட்டார் பைக் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் வக்கீல் பகீரதன் பாட்டி ஜெயலட்சுமி இறந்தார். 

                இந்த சம்பவத்திற்கு காரணமான  ஊராட்சி தலைவர் காசிநாதன் உள்ளிட்ட பலர் மீது புகார் செய்தும், ஊராட்சி தலைவர் மீது வழக்கு பதியாததால்  திருப்பாதிரிப்புலியூர் போலீசாரை கண்டித்து நேற்று வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று காலை திடீரென  ஊராட்சி தலைவர் காசிநாதனின் ஆதரவாளர்கள் 300க்கு மேற்பட்டோர், கடலூர் கலெக்டர் அலுவலகம், அதனைத் தொடர்ந்து எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு முன்விரோதம் காரணமாக காசிநாதன் மீது வக்கீல் பகீரதன் புகார் செய்துள்ளார். எனவே, காசிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது என  கோஷமிட்டனர். பின்னர் கலெக்டர் மற்றும் எஸ்.பி., யிடம் மனு கொடுத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior