உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

கடற்கரையோரம் 100 ஏக்கரில் பண்ணைக் காடுகள்

சிதம்பரம் : 

                 சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் கடற்கரையோர பகுதியில் நூறு ஏக்கரில் பண்ணைக் காடுகள் அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் திட்டமிட் டுள்ளது.

                சிதம்பரத்தை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு புதுச்சேரி, மரக்காணம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய 8 இடங்களில் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் இந்த ஆண்டு மேற்கொள்ள கூடிய திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.

                      இயக்க தலைவர் பேராசிரியர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் துறை தலைவர் வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில், கடற்கரையோர பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், வேளாண் வளர்ச்சி, மண் அரிப்பை தடுக்கவும் 100 ஏக்கரில் பண்ணைக் காடுகள் அமைப்பது. பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் கடற்கரையோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். பள்ளியை சுற்றிலும் தோட் டம் அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தல். தொழில் நுட்ப அறிவியல் நுணுக்கங்களை அனைத்து மக்களுக்கும், தொழில் துறை சார்ந்தோர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்குதல். சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் திட்டங்கள் வகுத்து செயல்படுத்துதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வரும் ஆண்டில் இப்பணியை பெரிய அளவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior