உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடைக்கு தொழில்நுட்பங்கள்

கடலூர்:
 
                  கம்பு அறுவடைக்கு முன்னும், பின்னும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை வெளியிட்டுள்ளது.  
 
வேளாண் துணை இயக்குநர் நா.தனவேல், வேளாண் அலுவலர் ந.சுரேஷ் ஆகியோர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
                    கடலூர் மாவட்டத்தில் கம்பு அறுவடை பரவலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் வீரிய ஒட்டு கம்பு ரகங்களை அதிக அளவில் பயிரிட்டு உள்ளனர்.  விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு அதிக விலை கிடைக்கும் வகையில், கம்பு அறுவடையின்போது, கீழ்க்காணும் அறுவடைக்கு முன்செய் மற்றும் அறுவடைக்கு பின்செய் தானிய நேர்த்தி தொழில்நுடபங்களைத் தவறாது கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
                   கதிர்கள் முதிர்ந்து இலைகள் பழுப்பு நிறமாக மாறியதும், கதிர்களை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும். மழை நேரங்களில் அறுவடை செய்தால், பூஞ்சாணம் தாக்கிய கதிர்களை, தனியே பிரித்துக் காய வைக்க வேண்டும்.  காய வைத்த கதிர்களில் இருந்து கதிர் அடிக்கும் கருவிகள் அல்லது கல் உருளைகளை பயன்படுத்தி தானியங்களைப் பிரித்து எடுக்க வேண்டும். பின்னர் மணிகளை காற்றில் தூற்றி, இலைகள் சருகுகளை நீக்க வேண்டும். 
 
                        விதைகள், கல், மண், இதர தானியங்களையும் உடைந்த தானியங்களையும் தனியாக பிரித்து நீக்கி விடவும்.  கம்பினை நன்கு காய வைத்து நிழலில் உலர்த்தி, சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி மூடி சேமிக்கவும். உள்பக்கம் பாலித்தீன் தாள் பொருத்திய சாக்குகளில் தானியங்களை சேமித்தால், மழைக்காலங்களில் ஈரப்பதத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.  காய வைத்த கம்பினை சேமிக்கும்போது மாதம் ஒருமுறை வெயிலில் காயவைத்து ஆறவிட்டு, சேமிப்பது முக்கியம். இல்லாவிட்டால் வண்டுகள் தாக்கி, கம்பின் தரம் பாதிக்கப்படும்.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior