உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக் கிழங்கில் மர்ம நோய் தாக்குதல்: விவசாயிகள் அச்சம்

சிறுபாக்கம் : 

                சிறுபாக்கம் பகுதிகளில் கருணைக்கிழங்கு பயிரில் மர்ம நோய் தாக்குதலால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

                சிறுபாக்கம், அரசங்குடி, மாங்குளம், அடரி, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் நிலத்தடி நீரினை பயன்படுத்தி மிகவும் குறைந்த அளவிலான நிலத் தில் கத்தரி, வெண்டை, வெங்காயம், பாகை, தக்காளி, கருணைக் கிழங்கு உள்ளிட்ட காய்கறி பயிர்களை விளைவித்து வந்தனர். இதில் 10 மாத அறுவடை பயிரான கருணைக் கிழங்கு சோனா, விரளி, சட்டிக்கரணை, புளிக் கரணை ஆகிய கிழங்கு பயிர்களை விளைவித்து அறுவடைக்கு பின் திருச்சி, சேலம் மாவட்டம் தலைவாசல் நகர் புறங்களில் விற்று வருகின்றனர்.

                   முதிர்ந்த நிலையிலுள்ள கிழங்குகளில் திடீரென அழுகல் நோய் தாக்கி செடிகள் இறந்துள்ளது. திடீரென இந்நோய் தாக்குதலால் அச்சமடைந்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். உரம், உழவு, பூச்சி மருந்து என ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள், அறுவடைக்குத் தயாரான நிலையில் மர்ம நோய் தாக்குதலால் கருணைக் கிழங்கு பயிரினை பறி கொடுக்கும் நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior