உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

11ம் நூற்றாண்டு சிவலிங்கம் அவிநாசியில் கண்டுபிடிப்பு


             அவிநாசி அருகே பள்ளிச்சுவர் கட்டுவதற்காகத் தோண்டப்பட்ட குழியிலிருந்து கிபி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த லிங்கத்தை அருங்காட்சியகத்துக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை வருவாய்த்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர்.  
 
                   அவிநாசி ஒன்றியம், காணூர் ஊராட்சி, பெரியகாணூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் எழுப்புவதற்காக கடந்த 10 நாள்களாக பள்ளியைச் சுற்றிலும் குழி தோண்டப்பட்டது. பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளியின் முன்புறம் கடந்த அக். 9ம் தேதி குழிதோண்டிய போது லிங்கம் போன்ற கல் தெரிந்துள்ளது. அப்பகுதி மக்கள் தொடர்ந்து தோண்டி அக்கல்லை எடுத்தபோது, கூம்பு வடிவத்தில் சிவலிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த லிங்கத்தைப் பார்வையிட்டனர். அந்த லிங்கம் கிபி 11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior