உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

தமிழகத்திலிருந்து 4,241 பேர் ஹஜ் புனித யாத்திரை

                         தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு 4,241 பேர் செல்வதாக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.  சென்னை விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை இரவு ஹஜ் புனித யாத்திரைக்கு முதல் குழுவினர் சென்றனர். இவர்களை விமான நிலையத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.  
அப்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியது:  
                         முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக அரசு சார்பில் ஹஜ் யாத்திரைக்கு செல்லும் பயணிகளை வழியனுப்பி வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திலிருந்து இதுவரை ஹஜ் புனித பயணத்துக்கு இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து ஆண்டுக்கு 2,700 பேர் தான் சென்றுள்ளனர். ஆனால், முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியால் இந்த ஆண்டு 4,241 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.  முதல் குழுவில் மொத்தம் 460 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.  வழியனுப்பும் நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர் மைதீன்கான், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior