உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 14, 2010

என்எல்சி விவகாரம்: பிரதமரை சந்திக்க முடிவு


                     என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

                      என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சமவேலைக்கு சமஊதியம் வழங்க வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் செப்டம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் மண்டல தொழிலாளர் நல ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அடங்கிய குழு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

                   என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான தொமுசவுடன், என்எல்சி நிர்வாகம் அக்டோபர் 10 ம் தேதி சென்னையில் ஒப்பந்தம் செய்து கொண்டதையடுத்து தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் பணிக்குச் செல்லத் தொடங்கினர். இந்நிலையில் நெய்வேலியில் 13.10.2010 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

இதுகுறித்து அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் செயலரும், அதிமுக எம்எல்ஏவுமான சின்னச்சாமி கூறியதாவது,
                  என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை தொடர்பாக இம்மாதம் 20ம் தேதி அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவினர் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior