உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

பேரவை மதிப்பீட்டுக் குழு 25-ல் கடலூர் வருகை

கடலூர்:

               குத்தாலம் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு 25-ம் தேதி கடலூர் வருகிறது.  

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

                           கடலூர் மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் பணிகளை ஆய்வு செய்ய சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு 25-ம் தேதி கடலூர் வருகிறது.  இக்குழு நெய்வேலி, பண்ருட்டி, கடலூர் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து, பல்வேறு பணிகளை ஆய்வு செய்ய உள்ளது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளது என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior