உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

கடலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை

நெல்லிக்குப்பம் : 

                   வரக்கால்பட்டு பள்ளியில் சுற்றுச்சூழல் மேம் பாட்டு கழிவறையை எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் திறந்து வைத்தார். நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளியில் வேர்எவர் இந்தியா சர்வீஸ் அமைப்பினர் சுற்றுச்சூழல் மேம்பாட்டு கழிவறை கட்டியுள்ளனர். இங்கு ஒரே அறையில் இரண்டு கழிவறைகள் இருக்கும். முதலில் ஒன்றை மட்டும் பயன்படுத்த வேண்டும். 

                     மலம் கழித்தவுடன் தண்ணீர் ஊற்றாமல் சாம்பல் போட வேண்டும். துர்நாற்றம் இருக்காது. அந்த டாங்க் நிரம்பியவுடன் காற்று புகாமல் மூடிவிட்டு அடுத்த கழிவறையை பயன்படுத்த வேண்டும். மூடி வைத்த டாங்கில் உள்ள மனித மலம் சில மாதங்களில் மக்கி தரமான விவசாய உரமாகிவிடும். மனித சிறுநீரையும் வீணாக்காமல் தொட்டியில் பிடித்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

                     இதுபோன்ற கழிவறைக்கு தண்ணீர் தேவையும் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இதுபோன்று இருபது பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படுகிறது. மாவட்டத்திலேயே முதன் முதலாக வரக்கால்பட்டு பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. தலைமையாசிரியர் ஜெயா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பிளஸ் தொண்டு நிறுவன தேசிய இயக்குனர் பரமசிவம், ஆறுமுகம், அனுகிரகா சேட்டிலைட் டவுன் நிர்வாக இயக்குனர் மணிரத்தினம், அந்தோணிசாமி, அங்கமுத்து, கவுன்சிலர்கள் விஜயகுமார், தமிழ்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் சுற்றுச்சூழல் கழிவறையை திறந்து வைத்து எம்.எல்.ஏ., சபா ராஜேந்திரன் பேசுகையில், 

                          "தமிழக முதல்வர் கருணாநிதி வழியில் தொடர்ந்து நாங்களும் பாடுபடுகிறோம். கழிவறை கட்டுவது முக்கியமல்ல. மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். மாணவர்கள் நன்றாக படித்து தனியார் பள்ளிகளை விட நன்கு மதிப் பெண் பெற வேண்டும்' என பேசினார்.

எம்.எல்.ஏ., வருத்தம் : தற்போது வரை வரக்கால்பட்டு பகுதி என் தொகுதியில் உள் ளது. தொகுதி மறு சீரமைப்புக்குப்பின் இந்த ஊர் குறிஞ்சிப்பாடியில் சேர்வது வருத்தமாக உள்ளது. என்னால் முடிந்தவரை பள்ளி வளர்ச்சிக்கு பாடுபட் டேன் என வருத்தத்துடன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior