உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

பரங்கிப்பேட்டை புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து "சென்டர் மீடியா' அமைக்கப்படுமா?

பரங்கிப்பேட்டை : 

                  பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சாலையின் நடுவில் "சென்டர் மீடியா' அமைக்க வேண்டும். பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. 

                 இவ்வழியாக இதுவரை போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. பு.முட்லூரில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் சாலையை பிரிக் கும் வகையில் "சென்டர் மீடியா' அமைக்காததால் கடலூர், புவனகிரி மற் றும் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. 

                     கடந்த நான்கு மாதங்களில் பு.முட்லூர் புறவழிச்சாலை பிரியும் இடத் தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பு.முட்லூர் புறவழிச் சாலை சாலை துவங்கும் இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய "சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior