உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் அறிமுகம்

காட்டுமன்னார்கோவில் : 

                   காட்டுமன்னார்கோவிலில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பாடம் நடத்தும் விதமாக ஜி.கே. மெட்ரிக் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., முதல் 12ம் வகுப்பு வரை உள்ள 19 வகுப்புகள் 80 லட்சம் ரூபாய் செலவில் ஸ்மாட் கிளாசாக மாற்றப் பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அருள் மொழிதேவி தலைமை தாங்கினார். 

                      பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி முன்னிலை வகித்தார். பள்ளி தாளாளர் குமாரராஜா வரவேற்றார். செயலாளர் அருண் வகுப்புகளை அறிமுகப்படுத்தினார். சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வகுப்புகளை துவக்கி வைத்தார். பருவதராஜ குருகுல பள்ளி தலைமை ஆசிரியர் சின்னமணி, துணை தலைமை ஆசிரியர் பழனிசாமி, உட்பட பலர் பங்கேற்றனர். பள்ளி முதல்வர் பார்த்திபன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior