உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 21, 2010

நெய்வேலி மாணவிகளுக்கு சூழலியல் கல்விப் பயிற்சி

நெய்வேலி:

                   நெய்வேலியில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் மாணவர்களுக்கு அண்மையில் சூழலியல் கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது.  

                  இப்பயிற்சி வகுப்பில் நெய்வேலி வட்டம் 11-ல் உள்ள என்எல்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 32 மாணவிகள் ஆசிரியர் பாலகுருநாதன் தலைமையில் பங்கேற்றனர். மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் குமாரவேலு  வரவேற்றார். பயிற்சி வகுப்பின் போது, வனங்களால் கிடைக்கும் நேரடி மற்றும் மறைமுகப் பயன்கள், வனம் அழிவதால் ஏற்படும் தீமைகள், வன உயிரினங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உலக வெப்பமயமாதலால் ஏற்படும் தீமைகள், மரம் வளர்ப்பு குறித்து விழுப்புரம் மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலர் ஏழுமலை மாணவிகளிடையே எடுத்துரைத்தார். வனவியல் விரிவாக்க விளம்பர அலுவலர் பாண்டியன் நன்றி கூறினார். 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior