உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 2 சிறுவர்கள் காயம்


பண்ருட்டி : 

               பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாலவிகார் பள்ளி வேன் நேற்று மாலை 4.15 மணியளவில், 20 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு திருவதிகைக்குச் சென்றது. திருவதிகை செட்டிப்பட்டறை பாதையில் சென்ற போது, சாலையின் ஓரம் டயர் சிக்கியதால் வேன் கவிழ்ந்தது. வேனில் சென்ற முத்துகிருஷ்ணாபுரம் திலீபன்(6), விக்னேஷ்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior