உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

உடற் கல்வி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி துவக்கம்

கடலூர் : 

                     உடற் கல்வி ஆசிரியர்களுக்கான நான்கு நாள் நடைபெறும் திறன் வளர் பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது.

                    வடலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சென்னை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் மற்றும் பள்ளி கல்வித் துறை சார்பில் கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் உடற் கல்வி ஆசிரியர்களுக்கான திறன் வளர் பயிற்சி வகுப்பு நேற்று (25ம் தேதி) துவங்கியது. வரும் 28ம் தேதி வரை நான்கு நாட்கள் பயிற்சி நடக்கிறது.

              மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி பயிற்சியை துவக்கி வைத்து பேசினார். பயிற்சி வகுப்பை மாநில அளவில் பயிற்சி பெற்ற திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள் தேவசேனாதிபதி, புதுப் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஜோதிபிரியா பயிற்சி அளித்தனர்.

                   மாவட்ட கல்வி அலுவலர் பூங்கொடி, பள்ளி முதல்வர் ஆக்னல், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முத்து கிருஷ் ணன், துணை முதல்வர் செல்வராசு பங்கேற்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior