உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

பங்குகளை விற்கும் அதிகாரம் என்எல்சிக்கு இல்லை: என்.எல்.சி. நிறுவனம்


நெய்வேலி:
 
              நிறுவனப் பங்குகளை விற்கும் அதிகாரம் என்.எல்.சி.க்கு இல்லை என்றும் என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை மத்திய அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என என்.எல்.சி. நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
 
இது தொடர்பாக என்.எல்.சி. நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்க அறிக்கை:
 
               என்.எல்.சி. பங்குகள் விற்பனை தொடர்பாக, 10 சதவீத பங்குகளை அடுத்த நிதியாண்டுக்குள் அரசு விற்பனை செய்ய இருக்கிறது என என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. அவர் அவ்வாறு கூறவில்லை. என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை தொடர்பான கொள்கை முடிவுகள் மத்திய அரசினை சார்ந்தது. எனவே இவ்விற்பனைத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்.எல்.சி. நிறுவனத்துக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். 
 
               மேலும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை எப்போது, எத்தனை சதவீதம் விற்பது என்பதெல்லாம் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். என்.எல்.சி. நிறுவனம் தனது புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது. எனவே பங்கு சந்தையின் மூலம் நிதி திரட்டும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்படி என்.எல்.சி. முடிவு எடுக்கும் என ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior