உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

அண்ணாமலைப் பல்கலை. சென்னை மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறையைத் தொடங்கிவைத்து பேசுகிறார் பல்கலைக்கழக துணை வேந்தர் எம். ராமநாதன்

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன் இதை தொடங்கி வைத்தார். 

பின்னர்  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன்   கூறியது:

                  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி மையங்களுக்கும் வெகுதூரம் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, முதல் முறையாக விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னை, தில்லி மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதிக மாணவர்களைக் கொண்ட மற்ற பெரிய மையங்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.மேலும் பல்வேறு துறைகளின் கீழ் ஆன்-லைன் படிப்புகளும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior