உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரூ.84 லட்சம் செலவில் சாலை பணிகள்

காட்டுமன்னார்கோவில் : 

            காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலைத் திட்டத்தின் கீழ் 84 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் போடும் பணி நடந்து வருகிறது. காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை போட 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. 

                அதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி நடந்து வருகிறது. டி.கே.பி. நகர், ஜெயராம் நகர், காளியம்மன்கோவில் தெரு, பெரியார் நகர், அண்ணா நகர், ஆர்.சி. தெரு உள்ளிட்ட 13 தெருக்களில் சிமென்ட் சாலை போடும் பணி படிப்படியாக துவங்கப்பட உள்ளது. மேலும் பேரிடர் தடுப்பு மேலாண்மை திட்டத்தின் கீழ் சிறப்பு சாலை போட 55 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் சில நாட்களில் விடப்படும் என்பதால் அதில் உப்புக்கார தெரு, காந்தியார் தெரு, பெரியார் நகர் தெரு, அண்ணா நகரில் கருணாநிதி தெரு உள்ளிட்ட 7 சாலைகள் அந்த நிதியில் போடப்பட உள்ளதாக பேராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior