உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

ஸ்பெக்ட்ரம்: முக்கிய நிகழ்வுகள்

மே-16, 2007: தயாநிதி மாறன் ராஜிநாமாவைத் தொடர்ந்து ஆ. ராசா தொலைத் தொடர்பு அமைச்சரானார்.
 
 அக்டோபர் - 25, 2007: ஏலம் மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு அறிவிப்பு.  

செப்டம்பர், அக்டோபர் - 2008: முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு.  

நவம்பர் - 15, 2008: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதால் தொலைத் தொடர்பு அமைச்சக அதிகாரிகள் சிலர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.  

அக்டோபர் - 21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.).  

அக்டோபர் - 22, 2009: மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை. 

 அக்டோபர் - 17, 2010: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தலைமை கணக்குத் தணிக்கைத் துறை தகவல். 

 நவம்பர் 2010: ஆ. ராசா ராஜிநாமா செய்யக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளால் முடக்கம்.  நவம்பர் - 14, 2010: ஆ. ராசா ராஜிநாமா.  

நவம்பர் - 15, 2010: மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபலிடம் கூடுதல் பொறுப்பாக தகவல் தொடர்புத் துறை ஒப்படைப்பு.  

நவம்பர் 2010: ஆ. ராசாவின் ராஜிநாமா மட்டும் போதாது. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கேரிக்கையால் முழுவதுமாக முடங்கியது நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர்.  

டிசம்பர் - 13, 2010: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 2001-ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைப்பு. 

 டிசம்பர் - 24 & 25, 2010: ஆ. ராசாவிடம் சி.பி.ஐ. விசாரணை.  

ஜனவரி - 31, 2011: ஆ. ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. விசாரணை; நீதிபதி சிவராஜ் பாட்டீல் தனது 150 பக்க அறிக்கையை மத்திய அமைச்சர் கபில் சிபலிடம் சமர்ப்பித்தார். 

 பிப்ரவரி - 2, 2011: முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்பு செயலர் சித்தார்த்த பெஹுரா, ஆ. ராசாவின் முன்னாள் தனி செயலர் ஆர்.கே. சண்டோலியா  ஆகியோர் கைது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior