உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 03, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கற்பித்தலின் கோட்பாடுகள் நிகழ்ச்சி

சிதம்பரம் : 

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் "கற்பித்தலின் புதிய கோட்பாடுகள்' தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. துணைவேந்தர் ராமநாதன் தலைமை தாங்கி மேலாண்மை தொடர்பான இரண்டு புத்தகங்களை வெளியிட்டார். தொலைதூரக் கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ் முன்னிலை வகித்தார். தொலைதூரக் கல்வி இயக்க மேலாண்மை துறை தலைவர் சையத் ஜாபர் வரவேற்றார். பாரதியார் பல்கலைக்கழக புல முதல்வர் வேங்கடபதி மேலாண்மை கல்வியின் புதிய பரிமாணங்கள் குறித்து பேசினார். கலைசார் புல முதல்வர் செல்வராஜூ, ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், ஆனந்த நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior